Wednesday, January 19, 2011

சிட்டு குருவிகள் , காணாமல் போன கதை !!!


வணக்கம் மானுட நண்பர்களே !!!

என் பெயர் சிட்டு குருவி ...


( பி .கு சிட்டுக் குருவிகள் , எங்கும் கிடைக்கததால் கிளியின் படங்கள் :) )

காடுகளிலும் , கழனிகளிலும் , கரன்ட் கம்பங்களிலும் 
                 என்னை நீங்கள் பார்த்திருப்பீர்கள் !!!

காக்கை , குருவி எங்கள் ஜாதி - என்று 
                 எமைப் பற்றி உவகையாய்  பாடியுள்ளான் , புரட்சிக்கவி !!!

" சிட்டு குருவி முத்தம் கொடுத்து ..." - என்று 
                 எனைப்பற்றி பாடி அன்பு வளர்த்தார்கள் !!!

"ஏய் குருவி , சிட்டுக்குருவி ...."  - என்று
                  நடிகர் திலகமும் கூவி மகிழ்ந்தார் .

இப்படி ஏற்றமும் , போற்றமுமாக சுதந்திரமாய் ,
                 சிறகடித்து வானில் பறந்திருந்தேன் !!!

பொல்லாத மானிடர் பலர் , நித்தமும் 
                (வெட்டி ) பொல்லாப்புக் கதைகள் பேச 


ஊரெல்லாம் வெட்டி எறிந்தார்கள் மரங்களை !!!
மனிதப் பதர்கள் , நட்டார்கள் செல்போன் டவர்களை !!!

அழித்தேவிட்டனர், வேரோடு எங்களை !!!

BLUE CROSS புதல்வர்களே !!!
         என் இனத்தை , எனக்கு கண்டுபிடித்து தாருங்களேன் , ப்ளீஸ் ?!!!




No comments:

Post a Comment