நாட்டுப் பற்றுள்ள அனைத்து தமிழருக்கும் (இந்தியருக்கும்) ,
என்னுடைய பணிவான வேண்டுகோள் .
போபர்ஸ், ஹவாலா, ஸ்பெக்டரம, காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் , சுடுகாட்டு கூரை ஊழல் , மாட்டுத் தீவன ஊழல், 22.5 லட்சம் கோடி சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கல் ( எத்தனை சைபர் என்று சத்தியமா தெரியல ..)
போதும் டா சாமி , அரசியல்வாதிகளை நம்பி நம்பி
கட்டியிருக்கும் கோவணம் கூட மிஞ்சாது போல ..
பொறுமைசாலி இந்தியர்களே , இத்தனை ஊழல்களுக்கும ,
நீங்கள் மௌனம் சாதித்து , மங்குணிகளாக இருந்தது போதும் .
நமது தாய் நாட்டை , ஊழலில் திளைத்த அரசியல்வாதிகளிடமிருந்து
மீட்டு எடுக்கவேண்டியது நமது கடமை .
மக்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம் .
காசுக்கு ஒட்டு வேண்டவே வேண்டாம் ..
லஞ்சம் கொடுக்க வேண்டாம் , லஞ்சம் வாங்கவும் வேண்டாம் .
சுய மரியாதையுடன் , நெஞ்சு நிமிர்த்தி வாழ்வோம் .
ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திர வேள்வி செய்வோம் .
ஜாக்கிரதை , காந்தி போல , வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல
முமமூடியிட்டு இன்று கோட்சேக்களும் , எட்டப்பன்களுமே நிறைந்திருக்கிறார்கள்.
தன்மானமுள்ள, இந்தியர்கள் யாவரும்
ஜாதி , மத , இன , மொழி அனைத்து வேலிகளையும் தாண்டி ஒன்றுபடுவோம் .
ஊழலுக்கு எதிரான மாபெரும் மனித சங்கிலி போராட்டம் !!!
வழிநடத்துபவர்கள் : http://www.indiaagainstcorruption.org/ அமைப்பினர் .
இடம் : காந்தி சிலை , மெரினா கடற்கரை , சென்னை .
நாள் : 30 ஜனவரி , 2011. ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9:00 முதல் 11:00 வரை .
மேலும் விவரங்களுக்கு :
http://www.facebook.com/event.php?eid=137372249656901&ref=mf
நமது வருங்கால சந்ததியினருக்காக , ஊழலற்ற இந்தியாவை விட்டுச்செல்லுவோம் ,
அனைவரும் வாருங்கள் !!!