Wednesday, March 30, 2011

ஆடாத ஆட்டமெல்லாம் !!!



ஆடாத ஆட்டமெல்லாம்,
போட்டவங்க மண்ணுக்குள்ள ,
போன கதை உனக்கு தெரியுமா?

 
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மை என்ன, உனக்கு புரியுமா?





வாழ்க்கை இங்கே யாருக்கும் 
சொந்தமில்லையே,
வந்தவனும் வருபவனும் 
நிலைப்பதில்லையே,


நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை, பாரு


நித்தம் கோடி சுகங்கள் தேடி, கண்கள் மூடி அலைகின்றோம், பாவங்களை மேலும் மேலும், சேர்த்துக்கொண்டே போகின்றோம், மனிதன் என்னும் வேடம் போட்டு, மிருகமாக வாழ்கின்றோம், தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து, தீமைகளை செய்கின்றோம் ,
  
பேருக்காக ஒரு ஆட்டம்,
காசுக்காக பல ஆட்டம்,




எட்டு காலில் போகும்போது,
ஊரு போடும் ஆட்டமே



காலம் மீண்டும் திரும்பாதே,
பாதை மாறி போகாதே 

பூமி கொஞ்சம் குலுங்கினாலே,
நின்று போகும் ஆட்டமே !!!



 

No comments:

Post a Comment