முன்பெல்லாம் பள்ளிக்கூடம் மெயின் ரோட்டில் இருக்கும் , சாராயக்கடை
சந்து பொந்துகளில் இருக்கும் .
இப்போது சாராயக்கடை , மெயின் ரோட்டிலும் ...
பள்ளிகூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன .
அந்தப் பள்ளிகூடத்தை நடத்துவதும் அதே சாராயக்கடை முதலாளி தான்.
பள்ளியில் படித்து விட்டு வேலைக்கு போனால் .
சாராயக் கடையில் தான் வேலை கொடுக்கிறார்கள்.
ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை.
தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருசத்துக்கு 1 லட்சம் (1.76 லட்சம் அல்ல ?! )
லிட்டர் சாராயம் விற்கும்.
இதைத் தயாரிக்க குறைந்தது 14 டி.எம் .சி தண்ணீராவது வேண்டும் .
இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால்,
ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே .
( அது சரி ராமநாதபுரம் என்ன , கோபாலபுரம் பக்கத்திலா இருக்கிறது ? )
ஆனா நம்ம ஆளுங்க , அவ்வளவு சாராயத்தையும் குடிச்சுட்டு ,
ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்துடறாங்க.
அந்த ஒன்னுக்கு அடிக்க கூட மூணு ரூபா கேட்கறான் ?
(கலைஞரின் பொன்னாட்சியில் அரிசி கூட ஒரு ரூபா தான் , ஆனா ஒன்னுக்கு அடிக்க
மூணு ரூபா ..... என்ன கொடும சார் இது ?! :)
யாருப்பா அது , கழகத்தின் தேர்தல் அறிக்கையில ( அதாவது இலவசங்கள் list ல இதையும் சேர்த்துடுங்க ---- உ.பி க்கள் கவனிக்க
)
-- "பூபாளம்" பிரகதீஸ்வரன்
நாடகக் கலைஞர் .
நன்றி ஆனந்த விகடன்
No comments:
Post a Comment